Monday, March 09, 2015

தமிழ் கற்பிக்க ஒரு செயலி தேவை




திரு. பொள்ளாச்சி நசன் அவர்கள் தமிழ் கற்பிக்க ஒரு எளிய முறையை உருவாக்கியுள்ளார்.

அவர் கூற்றுப்படி,

"மாணவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும்."


இங்கிலாந்தில் உள்ள நியூகாசில் கல்விக் கழகத்தினர், http://newcastletamilacademy.uk/
இந்த முறையைப் பின்பற்றி, மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வருகின்றனர்.
பாரம்பரிய முறையைவிட, இந்த புதிய கல்விமுறை, மாணவர்களுக்கு எளிதாகவும், ஆர்வமூட்டும் வகையிலும் உள்ளதை ஆமோதிக்கின்றனர்.

இம்முறையின் சிறப்புகளை இங்கே காண்க.
http://win.tamilnool.net/sound/sutty.pdf   

32 அட்டைகள் மூலம் மிகமிக எளிய முறையில் தமிழ் கற்பிக்கும் முயற்சி இது.

இந்த 32 அட்டை/பாடங்களை இங்கே பெறலாம்.
http://www.thamizham.net/kal/ttenglish/cards32-u8.htm

இவற்றை இணைய வழியில் ஒலிக்குறிகப்புகளோடும், எழுதும் முறையோடும் இங்கே கற்கலாம்.
http://www.thamizham.net/kal/ttenglish/index-u8.htm
http://win.tamilnool.net/sound/uuu/uuu.htm

இந்த பாடங்களுக்கு இன்னும் சுவையூட்ட, இவற்றை ஆன்டிராய்டு, ஐஓஎஸ் செயலிகளாக மாற்றலாம்.
நிறைய வண்ணங்கள், ஒலிக்குறிப்புகள், பயிற்சிகள், சோதனைகள், அசைவூட்டங்கள் சேர்க்கலாம்.

பெற்றோர்களும், குழந்தைகளும் நவீன தொழில்நுட்கங்கள் வழியே தமிழ் கற்பது மிக இனிமையாக இருக்கும்.

கட்டற்ற / திறமூல மென்பொருட்களாக இந்த செயலிகளை உருவாக்க ஆர்வம் கொண்டோர் tshrinivasan@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புக.


தமிழை அடுத்த தலைழுறைக்கு எடுத்துச் செல்ல, நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோமே!

மிக்க நன்றி

No comments: